அமெரிக்காவில், முன்னாள் காதலனைப் பழிவாங்கும் நோக்குடன், ‘கண் துளி மருந்தை’ (Eye Drops) பயன்படுத்திப் பல மாதங்களாக மெதுவாக விஷம் கொடுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரியான தனது காதலன் பிரிந்து சென்ற பிறகு, அவரது அண்ணன் வீட்டில் தங்கியிருந்த அந்தப் பெண், பழிவாங்கும் நோக்குடன் செயல்படத் தொடங்கினார். அவர் அன்றாடம் பயன்படுத்தும் காபி, உணவு மற்றும் பானங்களில்,
‘டெட்ராஹைட்ரோசோலின்’ (Tetrahydrozoline) எனப்படும் நச்சுப் பொருள் அடங்கிய கண் துளி மருந்தை (விசின் போன்ற பிராண்டுகள்) தொடர்ந்து கலந்து கொடுத்துள்ளார். இந்த வேதிப்பொருள் உடலில் சேரும்போது, அது நரம்பு மண்டலம், இதயம், இரத்த செல்கள் மற்றும் மூளை ஆகியவற்றைப் பாதித்து, ஆரம்பத்தில் உடல் சோர்வு, பின்னர் பலவீனம், பெயர் தெரியாத வலி என மெதுவாக உடலைச் செயலிழக்கச் செய்து, இறுதியில் மரணத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
பல நாட்களாக உடல்நிலை மோசமடைந்து வந்த அவரது காதலன் இறுதியில் மரணமடையவே, உடல் பரிசோதனையில் தொடர்ந்து நச்சுப் பொருள் சேர்க்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. தடயவியல் மற்றும் டி.என்.ஏ. சோதனைகளின் மூலம், இந்த ‘கண் துளி விஷம்’ கலந்த கொடூரச் செயலை அந்தப் பெண்ணே செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் தான் செய்த குற்றத்தை எந்த வருத்தமும் இன்றி ஒப்புக்கொண்ட அப்பெண்ணுக்கு, நீதிமன்றம் பரோல் இல்லாத ஆயுள் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தச் சம்பவம், உறவுகளில் நிலவும் நம்பிக்கையின்மை, மனநலப் பிரச்சினைகள் மற்றும் சமையலறைப் பொருட்களிலுள்ள சாதாரணப் பொருட்களைக் கூட நச்சுப் பொருளாகப் பயன்படுத்தும் ஆபத்து குறித்து பொதுமக்களிடையே ஒரு பெரிய விவாதத்தையும் பாதுகாப்புக் குறித்த விழிப்பையும் ஏற்படுத்தியுள்ளது
.
news-admin
கடலுக்குள் சுனாமி… கட்டுப்படுத்தவே முடியாத புதிய ஆயுதம்! ரஷ்ய ஜனாதிபதி அறிவித்த ‘மரண’ச் செய்தி..!
உலகப் பாதுகாப்பு மற்றும் இராணுவ அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு முக்கிய தகவலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உறுதிப்படுத்தியுள்ளார். அணுசக்தி மூலம் இயங்கும், நீருக்கு அடியில் இயங்கும் புதிய தலைமுறை ட்ரோன் (Autonomous Underwater Vehicle) ஆன ‘போஸிடான்’…
எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்! திமுக-வின் – ₹25 லட்சம் டீலிங்! அமலாக்கத்துறை ரிப்போர்ட்!
தமிழ்நாட்டில் ‘எங்கும் ஊழல், எதிலும் ஊழல்’ என்ற நிலை நிலவுவதாகக் கூறி, ஆளும் திமுக அரசின் அடுத்த ஊழல் குற்றச்சாட்டை அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) தற்போது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இது, நகராட்சி நிர்வாகத் துறை சார்ந்த பணிகளில் அரங்கேற்றப்பட்டதாகக்…











