வளர்ப்புத் தந்தையின் மிருகத்தனமான குற்றத்திற்கு உச்சகட்ட தண்டனை! 104 ஆண்டுகள் சிறைவாசம்! தீர்ப்பு எதிரொலியால் மலேசியாவில் பெரும் பரபரப்பு!

2 days ago

மலேசியாவில், தனது இரண்டு வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 18 பிரம்படிகளும் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய இளம்பெண்கள் ஆவர். 2020ஆம் ஆண்டு முதல் இந்தச் சம்பவம் தொடர்ந்து நடந்ததாகவும், இந்த கொடூரமான துன்புறுத்தல் குறித்து கடந்த மாதம் அவர்கள் தங்களது தாயாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மகள்களின் துயரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், உடனடியாக இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வளர்ப்புத் தந்தை உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த மலேசிய நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், அவருக்கு இந்த கடுமையான தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது. பாலியல் வன்கொடுமை போன்ற மிருகத்தனமான குற்றங்களுக்கு எதிராக நீதிமன்றம் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வளர்ப்புத் தந்தையின் கொடூரச் செயலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கு நீதி கிடைத்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ramkumar

இணையத்தை நெகிழ வைத்த ரஷ்யர்… பாகிஸ்தான் தெருக்களில் ஏன் இந்த கோஷம்…? வைரலாகும் வீடியோ…!!

பாகிஸ்தான் தெருக்களில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சமூக ஊடகவியலாளர் மேக்சிம் ஷ்செர்பாகோவ் (Maxim Shcherbakov) என்பவர், ‘ஜெய் ஶ்ரீ ராம்’ எனக் கோஷமிடும் காணொளி சமீபத்தில் இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகப் பரவி வருகிறது. இந்தக் காணொளியில், பாகிஸ்தான் வாழ் பொதுமக்கள்,…

Read more

இந்தியாவுக்கு_குட்நியூஸ்: தங்க விற்பனை வரிச் சலுகையை நீக்கிய சீனா! உலகச் சந்தையில் என்ன நடக்கும்? இந்தியச் சந்தையில் ஏற்படும் ‘சாதகமான’ தாக்கம்..!!!

சீனா எடுத்த முக்கிய முடிவு: உலகின் மிகப்பெரிய தங்கத்தை வாங்கும் நாடான (நுகர்வோர்) சீனா, தங்க விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்த நீண்டகால வரி விலக்கை (Tax Exemption) ரத்து செய்துள்ளது. இந்த புதிய விதி நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு…

Read more