போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் நோக்கில் “முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டுத் திட்டம் இன்று (30.10.2025) மட்டக்களப்பிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் சிறிலங்கா” வேலைத் திட்டத்திற்கமைய குறித்த தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வும் இவ்வாறு இடம்பெற்றது.
அதன்படி, இன்று (30.10.2025) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
போதைப்பொருள் வலையமைப்பு
போதைப்பொருள் வலையமைப்பை தோற்கடிக்கும் “முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஜனாதிபதியின் விசேட உரை நிகழ்நிலை ஊடாக காண்பிக்கப்பட்டதுடன் போதைப் பொருளற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களினால் சத்தியப்பிரமாக நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், காவல் திணைக்கள உயரதிகாரிகள், முப்படை அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
















