மகிந்தவுடன் சந்திப்பை நடத்தினாரா அநுரவின் பெண் எம்.பி : வெளியான சர்ச்சை பதிவு

6 days ago

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி, தனது அதிகாரபூர்வ முகநூல் பதிவில், தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நட்பு உரையாடலில் ஈடுபட்டுள்ளவர் தான் அல்ல என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் மகிந்த ராஜபக்சவுடன் என்னைக் காட்டும் புகைப்படத்தில் இருப்பவர் நான் அல்ல என்பதையும், மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருமண விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதையும், திருமண விழாவில் நான் விருந்தினராக இல்லை என்பதையும் எனது கட்சி உறுப்பினர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

 திருத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை

இது எந்த வகையிலும் திருத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

 வெளியான சர்ச்சை பதிவு | N P P Mp Kottahachchi Conversation Mahinda

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!