பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த முடிவை மாற்றாவிட்டால், டிசம்பர் முதல் வாரத்தில் நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் தொழிற்சங்கம் மேலும் எச்சரித்தது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.











