இந்தியா சத்தீஸ்கரில் தொடருந்து விபத்து: எட்டுப் பேர் பலி! மேலு்ம் பலர் பலி!

3 hours ago

மத்திய இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் நேற்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் பயணிகள் தொடருந்தும் சரக்குத் தொடருந்தும் மோதியதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 116 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிலாஸ்பூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 17 பேர் வரை ஆபத்தான நிலையில் உள்ளனர். இது ஒரு பெரிய விபத்து என்று மாவட்ட அதிகாரி சஞ்சய் அகர்வால் தெரிவித்தார்.

Post a Comment