இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில்  இன்று (05) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.