சுன்னாகத்தில் வன்முறைக்குழு அட்டகாசம்: வீடு எரிந்து நாசம்!

20 hours ago

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (03.11.2025) அடையாளம் தெரியாத குழுவொன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக்குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது தீ வைத்துள்ளனர்.

இதனால் முச்சக்கர வண்டியானது முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

பாரிய சேதம் 

மேலும், வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதுடன், வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

 வீடு எரிந்து நாசம்! | Violent Mob Rampages In Chunnagam

இந்நிலையில் விழிப்படைந்த வீட்டார் தீயை அணைத்ததால் மேலும் சேதங்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் காவல்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery