அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், 39 வயது ஜெசிகா மௌத் என்ற பெண், ஆறு ஆண்டுகளுக்குள் நான்கு குழந்தைகளை தனது குளியலறையில் பிரசவித்து, அவற்றை கொன்று, உடல்களை அலமாரி மற்றும் கூரைக்கூடில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வீட்டு உரிமையாளர் வீட்டை சுத்தம் செய்ய வந்தபோது, ஒரு குழந்தையின் உடல் துணிகள் மற்றும் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு அலமாரியில் கிடந்ததைக் கண்டு, போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் தேடுதலில் மேலும் மூன்று உடல்கள் கூரைக்கூடில் டோட் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களில் மறைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த மனித இனம் தாங்க முடியாத கொடூரச் செயல், அவரின் இரு உயிருள்ள குழந்தைகளின் (6 மற்றும் 8 வயது) எதிர்காலத்தைப் பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
போலீஸ் விசாரணையில் ஜெசிகா, அனைத்து பிரசவங்களும் குளியலறையில் நடந்ததாக ஒப்புக்கொண்டார். முதல் குழந்தை பிரசவத்தின்போது ஒரு மென்மையான சத்தம் கேட்டதும் அவர் மயங்கி விழுந்ததாகவும், மயக்கத்தில் இருந்து விழித்தபோது குழந்தை அடியில் அழுத்தி மூச்சுத்திணறி இறந்திருந்ததாகவும் கூறினார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகள் இறந்து பிறந்தவை என்றும், எந்த சத்தமும் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் நான்காவது குழந்தை உயிருடன் பிறந்ததும், அதை தண்ணியில் அழுத்தி கொன்றதாகவும், அதன் உடலை துணியில் சுற்றி மறைத்ததாகவும் சொன்னார்.
அவர் பிரசவங்களை அறிவிக்காததற்கு காரணமாக, ஒரு சமயம் போதைக்கு எதிரான மருந்தை சட்டவிரோதமாக உட்கொண்டதால் தண்டனைக்கு பயந்ததாகக் கூறினார். இப்போது குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட அவர், கொலை, உடல் மறைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் நிற்கிறார்.
Babblumagesh30
“நீங்க பேண்ட் போட்டு இருக்கீங்களா?”… நீதிபதியுடன் கான்ஃபரன்ஸ் விசாரணையில் அரைகுறை ஆடையுடன் தோன்றிய போலீஸ்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!
டெட்ராய்ட் போலீஸ் அதிகாரி ஒருவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த நீதிமன்ற விசாரணையில் பேண்ட் இல்லாமல் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் 36வது மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த இந்த மெய்நிகர் விசாரணையில், அதிகாரி மேத்யூ…
சிங்கத்தின் வேட்டையைத் தொட்டாலும் கோபம் இல்லை! இறைச்சியை சமைத்துப் பகிர்ந்த மனிதர்! நெகிழ்ச்சியில் உறைந்த வைரல் வீடியோ..!!
சமூக ஊடகங்களில் தற்போது அதிசயிக்க வைக்கும் ஒரு காணொளி வைரலாகப் பரவி வருகிறது. அதில், ‘சிக்ரா’ (Sigra) என்று பெயரிடப்பட்ட ஒரு பெண் சிங்கம் தான் வேட்டையாடிய மாமிசத்தை சமைப்பதற்காக ஒரு மனிதருடன் பகிர்ந்துகொள்வது காட்டப்பட்டுள்ளது. இந்தச் சிங்கத்தின் பராமரிப்பாளரான வாலண்டின்…











