60 வயசுல வாழ்க்கையே போச்சு…. இனி உண்மை தெரிஞ்சா என்ன..? தெரியலனா என்ன…? சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்…!!

1 week ago

ஜப்பானில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மனித வாழ்வின் விதியும் விஞ்ஞானத்தின் வலிமையும் ஒன்றாக இணைந்த சுவாரஸ்யமான சம்பவமாக அமைந்துள்ளது.

டோக்கியோவில் 1953 ஆம் ஆண்டு San-ikukai மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகள் தவறாக மாற்றப்பட்டதால், ஒரு குழந்தை பணக்கார குடும்பத்தில் செழிப்பாக வளர, மற்றொருவர் வறுமையில் வாழ்ந்தார். அந்த வறுமையான  வாழ்க்கையைச் சந்தித்தவர், 60 ஆண்டுகளாக லாரி ஓட்டுனராக கடின உழைப்புடன் வாழ்ந்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த DNA பரிசோதனையில், அவர் உண்மையில் அந்த கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசு என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதன் அடிப்படையில், நீதிமன்றம் அவருக்குத் ¥38 மில்லியன் (சுமார் ரூ.2 கோடி) இழப்பீடு வழங்கியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவருடைய தாயும் தந்தையும் அவரை சந்திப்பதற்குள் மறைந்துவிட்டனர்.

இந்த சம்பவம் மருத்துவ துறையில் பொறுப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. ஒரே ஒரு தவறு, ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் மாற்றிவிடும் என்பதை இது நிரூபித்துள்ளது. மேலும், குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வையும், DNA பரிசோதனையின் அறிவியல் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, “விதி தாமதமானாலும் உண்மையை வெளிப்படுத்தும்” என்ற உணர்வை மக்களிடம் விதைத்துள்ளது.

Ramkumar

இனிமேல் எல்லாரும் உஷாரா இருங்க…. ₹17,500 அபராதம்…. சின்ன காபி ஊத்துறது கூட ‘குற்றம்’னு சட்டம் சொல்லுது….!!

லண்டனில் ஒரு பெண் பயணி, புர்கு யெசில்யுர்ட், தனது மீதமிருந்த காபியை பஸ்ஸில் ஏறுவதற்கு முன் வீதியில் உள்ள கழிவுநீர் குழாயில் ஊற்றியதற்காக £150 (சுமார் ₹17,500) அபராதம் விதிக்கப்பட்டார். இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1990-இன் பிரிவு 33-ன்படி, தண்ணீர்…

Read more

OMG! பயங்கரவாதிகளுடன் ரகசியத் தொடர்பு…. பாகிஸ்தானின் பஞ்சாபி ஜெனரல்கள் ‘வெள்ளை வேஷம்’ போடுவது அம்பலமா….? பலூச் தலைவர் குற்றச்சாட்டு….!!

தற்போது பாகிஸ்தான் இராணுவம் இரட்டைச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. ஒரு பக்கம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரீக்-ஏ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) இராணுவத்திற்கு எதிராகப் போரிடுகிறது. மறுபுறம், பலூசிஸ்தானில் உள்ள ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், பலூச்…

Read more