வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தலை நவம்பர் 28 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகர, ஒக்டோபர் 22 ஆம் திகதி தனது அலுவலகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.










