யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் புதிய பணிப்பாளராக பதவியேற்றுள்ளார்.
இதனடிப்படையில், நேற்று (30) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினை அவர் பெற்றுக்கொண்டார்.
பணிப்பாளர் நியமனம்
இவர் முன்னர் வடக்கு மாகாண சபையின் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் மற்றும் வடக்கு மாகாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இந்தநிலையில், தற்போது, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.











