யாழில் அடுத்தடுத்து போதைபொருள் விவகாரத்தில் தொடரும் கைதுகள்

6 days ago

யாழில் நான்கு சந்தேகநபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணியந்தோட்டம் பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரகசிய தகவல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கிராம் 540 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் அடுத்தடுத்து போதைபொருள் விவகாரத்தில் தொடரும் கைதுகள் | Four Arrested With Heroin In Jaffna

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை 

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் அடுத்தடுத்து போதைபொருள் விவகாரத்தில் தொடரும் கைதுகள் | Four Arrested With Heroin In Jaffna

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!