நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், சாரதிகள் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதி அமைக்கும் போது வெடியரசன் கோட்டை பகுதியில் தொல்பொருள் சின்னத்தை சேதப்படுத்தியது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஜவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் நேற்றையதினம் சாரதிகள் இருவர் கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பெயரில், நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் சந்தேகநபர்களை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.












