மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பேராசிரியர் : பிரதமர் ஹரிணி அளித்த உறுதிமொழி

1 day ago

வயம்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக தடுத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முறையான விசாரணை நடத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 வயம்ப பல்கலைக்கழகத்தில் கொரிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை அதிகாரபூர்வமாக கையளிக்கும் தேசிய விழாவில் இன்று (03) பங்கேற்ற பின்னர், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

 பாரபட்சமற்ற முறையில் விசாரணை

இந்த விசாரணை மிகவும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் ஒரு குழுவால் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

 பிரதமர் ஹரிணி அளித்த உறுதிமொழி | Investigation Professor Molested A Female Student

 நிகழ்வைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர் தலைவர் உட்பட மாணவர்கள் குழு ஒன்று சம்பவம் குறித்து புகார் அளிக்க வந்திருந்தது.

அவர்களில் இருவருக்கு பிரதமரைச் சந்தித்து சம்பவம் குறித்து எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!