புலிகளின் இரண்டாவது தளபதி குமரன் பத்மநாதனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா..! அரசிடம் கேள்வி

4 days ago

பாதாள உலக தொடர்புகளைக் கொண்ட லசந்த விக்ரமசேகரவுக்கு பாதுகாப்பை மறுத்த அமைச்சர் ஆனந்த விஜேபால, விடுதலைப் புலிகளின் இரண்டாவது தளபதி குமரன் பத்மநாதனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா என்று என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

இணையவழி ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது முன்னாள் அமைச்சர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்கள் யார்

வெலிகம தலைவர் லசந்த விக்ரமசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான ஆகியோர் பாதாள உலக தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்று சொல்ல இவர்கள் யார்

புலிகளின் இரண்டாவது தளபதி குமரன் பத்மநாதனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா..! அரசிடம் கேள்வி | Whether Security Provided To Kumaran Pathmanathan

 ரில்வின் சில்வாக்கள் முதன்மையான ஐ.ஆர்.சி.க்கள்

பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள ரில்வின் சில்வா, இந்த நாட்டில் 6661 பேரைக் கொன்ற ஒரு அரசியல் இயக்கத்தின் ஆயுதப் பிரிவைச் சேர்ந்தவர். ரில்வின் சில்வாக்கள் இந்த நாட்டில் முதன்மையான ஐ.ஆர்.சி.க்கள்

புலிகளின் இரண்டாவது தளபதி குமரன் பத்மநாதனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா..! அரசிடம் கேள்வி | Whether Security Provided To Kumaran Pathmanathan

 அவர்கள் நூற்றுக்கணக்கான டிரில்லியன் கணக்கான அரசு சொத்துக்களை அழித்துள்ளனர் என்றும், அத்தகைய குழு இன்று நாடாளுமன்றத்தில் வெள்ளை நிறத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!