நான்கு வருடங்களின் பின்னர் வந்த முதல் விமானம்! மீண்டும் சேவையை ஆரம்பித்த நிறுவனம்

1 week ago

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இலங்கைக்கு மீண்டும் விமானங்களை இயக்கும் குவைத் ஏர்வேஸின் முதல் முதல் விமானம் இன்று (27) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

குவைத் ஏர்வேஸின் விமானங்கள் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி அன்று இடைநிறுத்தப்பட்டன.

இதன்படி, இன்றைய முதல் சேவைக்காக குவைத் ஏர்வேஸால் A-320 நியோ விமானம் அனுப்பப்பட்டுள்ளது.


முதல் பயணம்

இந்த விமானம் இன்று காலை 08.40 மணிக்கு குவைத் நகர சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்து சேர்ந்தது, மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தண்ணீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களின் பின்னர் வந்த முதல் விமானம்! மீண்டும் சேவையை ஆரம்பித்த நிறுவனம் | Kuwait Airways Resumes Flights To Sri Lanka

94 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, காலை 09.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானம் மீண்டும் குவைத்திற்கு 105 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் புறப்பட்டுள்ளது.

விமானத்தின் வரவேற்பு

விமானத்தின் வரவேற்பு விழாவில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுனில் ஜெயரத்ன, இலங்கைக்கான குவைத்தின் பிரதி தூதுவர் அல் முஹானா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

நான்கு வருடங்களின் பின்னர் வந்த முதல் விமானம்! மீண்டும் சேவையை ஆரம்பித்த நிறுவனம் | Kuwait Airways Resumes Flights To Sri Lanka

இனிவரும் காலங்களில் குவைத் ஏர்வேஸ் விமானங்கள் குவைத்தில் உள்ள குவைத் நகர சர்வதேச விமான நிலையத்திற்கும் இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!