Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kiyas Shafe Oct 31, 2025 09:30 AM GMT
![]()
திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் இன்று(31) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை - நிலாவெளி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.










