அமெரிக்கா - வெனிசுலா இடையே போர் முழக்கம்! அதிரும் பசிபிக் பெருங்கடல்

4 days ago

செப்டம்பர் 2025 முதல் கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 62க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் 15க்கும் மேற்பட்ட கப்பல்களை அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் எந்த பொது ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்ப்பு நடவடிக்கை

ட்ரென் டி அரகுவா போன்ற வெனிசுலா குற்றக் கும்பல்களை குறிவைத்து நடத்தப்படும் பரந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விவரிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சட்டவிரோதமானது மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிராந்தியத் தலைவர்களால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - வெனிசுலா இடையே போர் முழக்கம்! அதிரும் பசிபிக் பெருங்கடல் | War Between The Unitedstates Venezuela Update

ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் இந்த கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவற்றை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் கூறியுள்ளார். இந்தத் தொடர் தாக்குதல்கள் வெனிசுலா கடற்கரைக்கு அருகே ஒரு பெரிய அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் படங்களின் படி, 'யு.எஸ்.எஸ் இவோ ஜிமா' என்ற தாக்குதல் கப்பல் வெனிசுலா கடற்கரையிலிருந்து 200 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் நேரடி-துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை மேற்கொள்வதைக் காட்டுகின்றன.

மேலும், உலகின் புதிய மற்றும் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டும், மூன்று நாசகார கப்பல்களுடன் கரீபியன் கடலுக்குச் செல்கிறது. இந்த மிகப்பெரிய கப்பலை நிறுத்துவது நிக்கோலசு மதுரோவின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

எஃப்-35 போர் விமானங்கள்

பி-1 மற்றும் பி-52 குண்டுவீச்சு விமானங்கள், அத்துடன் எஃப்-35 போர் விமானங்களும் இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலளித்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “தனது பாதுகாப்புப் படைகளை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா - வெனிசுலா இடையே போர் முழக்கம்! அதிரும் பசிபிக் பெருங்கடல் | War Between The Unitedstates Venezuela Update

அமெரிக்கா தனது நாட்டிற்கு எதிராக ஒரு புதிய மோதலை உருவாக்க முயற்சிக்கின்றது.

பிராந்திய பதட்டங்களும் அதிகரித்துள்ளன, மேலும் வெனிசுலா அண்டை நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவுடனான ஒரு பெரிய எரிவாயு ஒப்பந்தத்தை அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் கிரேவ்லியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தி வைத்தது” என கூறியுள்ளார்.